பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மங்காத்தா படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கிய படங்கள் எல்லாம் தோல்வியடைந்து வருகின்றன. அதனால் அவரை வைத்து படம் எடுக்க நினைத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் பின்வாங்கிவிட்டனர்.
எனவே வேறு வழியில்லாமல் 'பிளாக் டிக்கெட்' என்ற பட நிறுவனம் தொடங்கி அதன் சார்பில் 'சென்னை-600028 - இரண்டாவது இன்னிங்ஸ்' படத்தை தயாரித்து இயக்கினார் வெங்கட் பிரபு. அந்தப்படமும் காலை வாரிவிட்டதால் அப்ஸெட்டானார்.
மீண்டும் தயாரித்து இயக்கினால் பெரிய ஹீரோவை வைத்துத்தான் படம் பண்ண வேண்டும் என்ற முடிவில் உள்ள வெங்கட்பிரபு, தற்போது சின்னபட்ஜெட்டில் 'ஆர்.கே.நகர்' என்ற படத்தை தயாரிக்கிறார். வெங்கட் பிரபுவின் உதவியாளரும், 'வடகறி' படத்தை இயக்கிய வருமான சரவணராஜன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.
'ஒரு நாயகன் உருவாகிறான்'என்ற டேக் லைனோடு படத்தின் டைட்டிலை அறிவித்தார் வெங்கட் பிரபு. இந்த படம் அரசியல் பின்னணியில் எடுக்கப்படவிருக்கும் படம் என்று சொல்லப்படுகிறது.
அதாவது அமைதிப்படையில் சத்யராஜ் நடித்த அமாவாசை கேரக்டர் போல் அடிமட்டத்திலிருந்து அமைச்சராக உயரும் அரசியல் கட்சியின் தொண்டன் பற்றிய கதையாம்.
இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் டீமை சேர்ந்த வைபவ், சனா, சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
மக்களுக்கு ஆறுதலான செய்தி... இந்தப் படத்தில் பிரேம்ஜி நடிக்கவில்லையாம்.