தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரன்பீர் கபூர் உடனான காதல் முறிவுக்கு பிறகு சல்மான் உடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார் கத்ரீனா கைப். ஏற்கனவே ஏக்தா டைகர் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகமான டைகர் ஜிந்தா ஹே படத்தில் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் ஐப்பா விருது தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சல்மான், கத்ரீனா ஆகியோருடன் ஆலியா பட்டும் கலந்து கொண்டார்.
அப்போது ஆலியாவிடத்தில் எப்போது சல்மான் உடன் இணைந்து நடிக்க போகிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு ஆலியா, எப்போது நடக்கும் என்று தெரியவில்லை, ஆனால் விரைவில் நடக்கும் என நினைக்கிறேன் என்றார். அதற்கு அடுத்து பேசிய கத்ரீனாவோ, "எனக்காக சல்மான் மற்றும் வருண் தவான் விட்டு விலகுங்கள் ஆலியா" என்று கேட்டு கொண்டார்.
கத்ரீனா சும்மா விளையாட்டுக்காக அப்படி கூறினாரா.... இல்லை சல்மான் மீதுள்ள ஈர்ப்பினால் அப்படி கூறினாரா...? என ஒரு விவாதம் போய் கொண்டிருக்கிறது.