விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
சில நடிகைகள் இயல்பிலேயே புரட்சிகரமாக பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். இன்னும் சில நடிகைகளோ புரட்சிகரமான கேரக்டர்களில் நடித்ததால் தங்களையும் அப்படிப்பட்டவர்களாகவே நினைத்துக்கொண்டு தொடர்ந்து அதையே மெயின்டெய்ன் பண்ணுவார்கள்.. மலையாள நடிகை ரீமா கல்லிங்கலும் அந்தவகையை சேர்ந்தவர்தான். சில வருடங்களுக்கு முன் வெளியான '22 பீமேல் கோட்டயம்' படத்தில் தன்னை ஏமாற்றி சீரழித்த காதலனுக்கு வித்தியாசமான தண்டனை கொடுப்பவராக நடித்திருந்தார் ரீமா. அவர் நடிப்பிற்கு பாராட்டுக்கள் கிடைக்கவே, தன்னை ஒரு புரட்சி நடிகையாகவே நினைத்துகொண்டு அவ்வப்போது சில விஷயங்களில் குரல் கொடுத்து சர்ச்சையை கிளப்புவது ரீமாவின் வழக்கம்.
இப்போதும் அப்படித்தான். கேரளாவில் திரைத்துறையை சேர்ந்த பெண்கள், நடிகைகள் உட்பட பலரும் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பு இயக்கும் ஆரம்பித்துள்ளார்கள்.. சமீபத்தில் நடைபெற்ற இந்த அமைப்பின் கூட்டத்தில் பேசிய ரீமா கல்லிங்கல் சம்பந்தமே இல்லாமல், “சினிமாவில் ஆண்கள் 60 வயதானாலும் ஹீரோவாகவே நடிக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு இருபது வயது பெண் ஜோடியாக நடிக்க வேண்டி இருக்கிறது. அதேபோல 50 வயதான பெண் 60வயதான நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கவேண்டி இருக்கிறது. வயோதிகம் என்பது பெண்களுக்கு மட்டும் அவர்கள் முகத்தில் கட்டிக்கொடுத்து விடுகிறது” என கூறியுள்ளார்.
அங்கு கூடியிருந்த மற்ற நடிகைகள் கூட இப்போது எதற்கு ரீமா கல்லிங்கல் தேவையில்லாமல் இதை பேசினார், இதற்கும் பெண்கள் பாதுகாப்புக்கும் என்ன சம்பந்தம் என குழம்பி போய்விட்டார்களாம்.. ரீமா குறிப்பிட்டது மம்முட்டி,. மோகன்லால் போன்ற சீனியர் நடிகர்களைத்தான் என்பது தெளிவாகவே தெரிவதால் நிச்சயம் ஒரு சர்ச்சை வெடிக்கப்போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.