600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தெலுங்கில் சில வருடங்களுக்கு முன் ராம்சரண்-காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'மகதீரா'. இந்தப்படத்தின் காட்சிகள் பல, சமீபத்தில் 'ராப்தா' என்கிற ஹிந்திப்படத்தில் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியது. 'மகதீரா' தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இந்த விஷயத்தை சட்டப்படி சந்திக்கப்போவதாக கூறியுள்ளார். ஆனால் படத்தின் இயக்குனரான ராஜமௌலி மட்டும் இந்த விஷயத்தில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. காரணம் மகதீரா படம் வெளியான பின்னர் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், ராஜமௌலியின் மனதில் ஏற்படுத்திய காயம் தானாம்.
இதுபற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் ராஜமௌலியே கூறியுள்ளார். விஷயம் இதுதான். மகதீரா படத்தை இயக்க ஒப்புக்கொண்டபோதே சில முக்கியமான நிபந்தனைகளையும் சேர்த்துள்ளார் ராஜமௌலி. அதாவது படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும், பில்டப் கூடாது, படத்தை வலுக்கட்டாயமாக தியேட்டர்களில் ஓட்டக்கூடாது என்பவை தான் அந்த நிபந்தனைகள். ஆனால் அல்லு அரவிந்த் படம் வெளியாகி சூப்பர்ஹிட்டானதும் இந்த நிபந்தனைகளை காற்றில் பறக்கவிட்டு விட்டாராம்.
பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் அவர் வெளியில் சொன்ன தொகையை விட 20 சதவீதம் குறைவுதானாம். அதேபோல படம் வெற்றிப்படம் தான் என்றாலும் கூட நூறாவது நாள் விழா கொண்டாட வேண்டும் என்பதற்காக சில தியேட்டர்களில் படத்தை எடுக்காமல் வலுக்கட்டாயமாக ஓட்ட செய்தாராம் அல்லு அரவிந்த். இந்த கோபத்தில் தான் அப்படிப்பட்ட மாபெரும் படத்தை இயக்கிய ராஜமௌலி அந்தப்படத்தின் 100வது நாள் விழா நடைபெற்றபோது அதில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தாராம். இப்போது மகதீரா சர்ச்சை விஷயத்தில் மௌனம் சாதிப்பதும் அந்த கோபத்தில் தான் என்றே சொல்கிறார்கள்.