பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் காலா படப்பிடிப்பு மும்பையிலுள்ள தாராவியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள தமிழர்கள் வாழும் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதால் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் மக்கள் கூட்டம் படையெடுத்தவண்ணம் உள்ளனர். இதனால் பலத்த செக்யூரிட்டி போடப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
மேலும், காலா படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரபரப்பு செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், காலா படத்தின் பர்ஸ்ட் லுக்கில் ரஜினி அமர்ந்திருக்கும் மகேந்திரா ஜீப் நம்பர் அம்பேத்கர் சம்பந்தப்பட்டது என்ற செய்திகள் பரபரப்பாக வெளியாகி வந்த நிலையில், நேற்று காலா படத்தில் ரஜினியின் ஓப்பனிங் பாடல் இணையதளங்களில வெளியாகி விட்டதாக ஒரு செய்தி வெளியானது. பின்னர் அது ஒரு எப்எம்மில் வெளியிட்ட பாடல் என்று தெரியவந்தது.
இந்த நிலையில், தற்போது காலா ரஜினி குறித்த இன்னொரு செய்தியும் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, காலா ரஜினியின் கையில் எஸ் என்ற எழுத்தில் தொடங்கும் ஒரு வாசகம் டாட்டூ வடிவில் எழுதப்பட்டுள்ளதாம். இந்த டாட்டூவிற்கும், காலா பட கதைக்கும் சம்பந்தம் இருப்பதாக சொல்கிறார்கள்.