ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இளையராஜாவின் பிறந்த நாள் விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நாள் முழுவதும் நடந்தது. நேற்று இரவு அரங்கத்துக்கு வந்த கமல்ஹாசன், இளையராஜாவுக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:
இளையராஜாவுக்கு எத்தனை வயது என்று தெரியாது ஆனால் அவர் இசைக்கு 200 அல்லது 300 வயசு இருக்கும். இனி எண்கள் கொண்ட அவரது வயதைப்பற்றி பேசத் தேவையில்லை. அவர் அதனை கடந்து வந்து விட்டார். இனி அவர் இசையின் வயதைப் பற்றித்தான் பேச வேண்டும். இசைதான் அவர் விலாசம். எனக்கு விலாசம் தந்ததும் அவர் இசை தான்.
எனது அண்ணன்கள் சாருஹாசன், சந்திரஹாசன் வரிசையில் அவரை வைத்திருக்கிறேன். அவர் தான் இனி என்னை பார்த்துக் கொள்ள வேண்டும். இதுவரை அப்படித்தான் கருதி வந்திருக்கிறேன் இப்போது மக்கள் முன் அதனை அறிவிக்கிறேன். எங்கள் இருவருக்கும் 45 வருட நட்பு, பாசம் இருக்கிறது. ராஜாவின் பிறந்த நாளை நீங்கள் இந்த ஒரு நாளாகத்தான் கொண்டாடுகிறீர்கள். நான் ஆண்டு முழுவதும் அவரது இசையோடு கொண்டாடி கொண்டு இருக்கிறேன்.
ஒரு மகா கலைஞனை பக்கத்தில் வைத்துக் கொண்டு புகழ்கிற பாக்கியம் யாருக்கும் எளிதில் கிடைக்காது. எனக்கு கிடைத்திருக்கிறது. நாகேஷ், சிவாஜி, பாலச்சந்தர் ஆகியோரை அவர்களை வைத்துக் கொண்டே புகழ்ந்திருக்கிறேன். இப்போது இளையராஜா. அவர் நமக்கு இலசவ இசை பயற்சி தந்திருக்கிறார். அவரை நன்றியோடு நினைத்துப் பார்ப்போம். இவ்வாறு கமல் பேசினார்.
பின்னர் பேசிய இளையராஜா "கமல் இதுவரை என் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்னதில்லை. இப்போது சொல்லியிருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஜினி ஒவ்வொரு வருடமும் சாமி நல்லா இருக்கீங்களா? வாழ்த்துக்கள் என்பார். கமல் என்னை ஒரு அண்ணாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். நானும் அதனை ஏற்றுக் கொண்டேன்" என்றார்.