'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அரசியலுக்கு போவதற்கு முன் சினிமா இயக்குநராக இருந்த சீமான், சில வருடங்களுக்கு முன் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார். ஜிஜே சினிமா பேனரில் தயாராகவிருந்த அந்தப் படத்துக்கு திலீபன் என்று பெயர் வைத்திருந்தார். சர்ச்சைக்குரிய கதை என்பதால் பின்னர் அப்படம் கைவிடப்பட்டது.
அதன் பிறகு திலீபன் கதையை விஜய், அஜித், சூர்யா தொடங்கி சீமான் சொல்லாத நடிகர்கள் இல்லை. அனைவரும் நடிக்க மறுத்துவிட்டநிலையில் மாதவனை வைத்து எடுக்க நினைத்தார். ஒரு கட்டத்தில் அவரும் ஒதுங்கிவிட்டார். அதன் பிறகு சினிமா பக்கம் வாராமல் அரசியலுக்குப் போனார். தற்போது மீண்டும் கோடம்பாக்கம் பக்க அவரது பார்வை திரும்பியுள்ளது.
சீமான் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள ஹீரோ ஜி.வி.பிரகாஷ். அடங்காதே, செம, 4G, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாளமயம் என பல படங்களை கையில் வைத்து படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், சில படங்களுக்கு இசை அமைத்தும் வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.
இந்த சூழலில் சீமான் தேடி வந்து கதை சொன்னதால் மறுக்க முடியாமல் அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சீமான் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் முதன் முதலாக நடிக்கவிருக்கும் படத்திற்கு 'கோபம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மற்ற தகவல்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.