டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இன்றைய தேதியில் படங்களை தயாரிக்கும் நிறுவனங்களை விட படங்களை வெளியிடும் நிறுவனம் தான் வியாபார சந்தையில் முதல் ஆளாக பார்க்கப்படுகிறது. தியேட்டர்களும் விநியோகஸ்தர்களும் மட்டுமல்ல, ரசிகர்களும் கூட படத்தை எந்த நிறுவனம் ரிலீஸ் செய்கிறது என பார்த்து தியேட்டருக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக இருந்தாலும் பாலிவுட்டில் ஒரு நல்ல வெளியீட்டாளர் என்கிற பெயரையும் கரண் ஜோகர் தக்கவைத்திருக்கிறார்.
அதனால் தான் 'பாகுபலி-2' படத்தை பாலிவுட்டில் வழங்குபவராக கரண் ஜோஹரிடம் படத்தை ஒப்படைத்தார்கள். இதற்காக ஒரு பைசா கூட கரன் ஜோஹர் கொடுக்கவில்லையாம். மாறாக கரண் ஜோஹரின் பெயரும் பப்ப்ளிசிட்டியும் தான் முதலீடாக இருந்தது. அதுதான் 'பாகுபலி-2'வுக்கு நிறைய தியேட்டர்களையும் நல்ல ஓப்பனிங்கையும் ஏற்படுத்தி கொடுத்தது. பாலிவுட்டில் சுமார் 500 கோடி வசூலை தாண்டிய இந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் பங்கு மட்டும் சுமார் 250 கோடியை தொட்டுள்ளதாம். இதில் கரண் ஜோஹரின் பத்து சதவீத கமிஷன் 25 கோடி ரூபாய் சுளையாக அவரது கல்லாப்பெட்டிக்கு வந்து சேர்ந்துள்ளது என வாயை பிளக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்..