பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாகுபலி பட நாயகன் பிரபாசுக்கு தற்போது 37 வயதாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பே அவரது பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க தயாராகி விட்டனர். ஆனால், பாகுபலி படத்தில் நடித்து வந்த அவர், அந்த படத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதால் 5 வருடங்களுக்கு திருமணத்தை தள்ளி வைத்திருந்தனர்.
இந்தநிலையில், பாகுபலி-2 படம் வெளியானபோது பிரபாஸ்-அனுஷ்கா ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால், பின்னர் அது வதந்தி என்பது தெரியவந்தது. அதையடுத்து இப்போது பிரபல சிமெண்ட் கம்பெனி தொழிலதிபர் ஒருவரின் பேத்தியை, பிரபாசுக்கு அடுத்த ஆண்டில் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்திருப்பதாக பிரபாஸ் போட்டோவுடன் அந்த பெண்ணின் போட்டோவை இணைத்து செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆனால் இதுப்பற்றி பிரபாஸ் தரப்பிலோ அல்லது அந்த சிமெண்ட் கம்பெனி தொழிலதிபர் தரப்பிலோ உறுதிசெய்யப்பட்வில்லை. ஆகவே இதுவும் வதந்தி தான் என்கிறார்கள்.