ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சுவாதி மற்றும் ராம்குமார் குடும்பத்திற்கு காட்டிய பிறகே, படத்தை வெளியிடுவோம். அவர்கள், தவறு இருப்பதாக கூறினால், திருத்தி வெளியிடுவோம், என, சுவாதி கொலை வழக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன் கூறினார்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடந்த சுவாதி கொலை வழக்கை மையமாக வைத்து, ரமேஷ் செல்வன் இயக்கத்தில், சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில், திரைப்படம் உருவாகிறது. சமீபத்தில், இதன் முன்னோட்டம் வெளியானது. இந்நிலையில், சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன், படத்தை வெளியிடக்கூடாது என, டி.ஜி.பி.,யிடம் புகார் மனு அளித்தார்.
இதுதொடர்பாக, இயக்குனர் ரமேஷ் செல்வன் கூறியதாவது: உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து, உளவுத்துறை, ஜனனம், கலவரம் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளேன். வீரப்பன், சீவலப்பேரி பாண்டி போன்ற பல படங்கள், உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்தே வெளிவந்தன. சுவாதி, ராம்குமார், போலீசார் மற்றும் மக்கள் பார்வை என, நான்கு வித கோணத்தில் திரைக்கதையை அமைத்துள்ளோம்.
பத்திரிகைகளில் வந்த தகவல்கள் மற்றும் நாங்கள் விசாரித்த உண்மைகளை, இப்படத்தில் கூறியுள்ளோம். இன்னொரு சுவாதி, ராம்குமார் உருவாகக்கூடாது என்பதற்காக, இச்சம்பவத்தை திரைப்படமாக எடுக்கிறோம். இதனால், சுய விளம்பரமோ, லாபமோ கிடையாது. லாபம் கிடைத்தால், அதில் ஒரு பகுதியை சுவாதி மற்றும் ராம்குமார் குடும்பத்திற்கு தர தயாராக உள்ளோம்.
படத்தை சென்சாருக்கு அனுப்பும் முன், போலீஸ், சுவாதி, ராம்குமார் குடும்பத்தினருக்கு காட்டுவோம். ஏதாவது ஆட்சேபம் தெரிவித்தால், அக்காட்சியை நீக்கி விட்டு படத்தை வெளியிடுவோம். சுவாதி கொலை வழக்கு படம், மக்களுக்கு பாடமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.