நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? |
ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் ஒரே நேரத்தில் நம்பர் ஒன் நடிகையாக கோலோச்சியவர் 'நடிகையர் திலகம்' சாவித்ரி. மகாநதி என்ற பெயரில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தெலுங்கு பட இயக்குனரான நாக் அஸ்வின் இப்படத்தை தெலுங்கில் இயக்குகிறார். அந்தப் படத்தை தமிழ், மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.
வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சமந்தாவும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது 'நடிகையர் திலகம்' படத்தில் ஜர்னலிஸ்ட்டாக நடிக்கிறாராம் சமந்தா.
வயதான நிலையில் உயிருக்குப்போராடிக் கொண்டிருக்கும் சாவித்திரியை சமந்தா பேட்டி எடுப்பது போலவும், அவரிடம் தன் கதையை சாவித்ரி விவரிப்பது போலவும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் சொல்வதென்றால், இந்தப் படத்தில் சமந்தா நடிப்பது கெஸ்ட்ரோல் தானாம்.
திங்கட்கிழமை ஐதராபாத்திலுள்ள ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை 5 நாட்கள் மட்டுமே நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து 2 வது ஷெட்யூல் 25 நாட்கள் நடைபெறுகிறது.