ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
10 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் 'சண்டக்கோழி'. இந்தப்படம் சூப்பர் ஹிட்டானது. ஆனால் இந்தப்படத்தில் பணியாற்றியபோது விஷால் - லிங்குசாமி இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும், இருவரும் எங்காவது நேரில் பார்த்தால் கூட பேசாமல் முறைத்துக்கொண்டு போவார்கள் என்று செய்திகள் வந்தன. அந்தளவுக்கு கொளுந்துவிட்டு எரிந்த விரோதம் காலப்போக்கில் அணைந்துபோனது.
காரணம்.. சண்டைக்கோழி -2 படம். தங்களுக்கு வெற்றிப்படமாக அமைந்த சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் விஷாலுக்கும், லிங்குசாமிக்கும் ஒரே நேரத்தில் ஏற்பட்டது. அதற்கு இருவரும் மீண்டும் இணைந்தால் தான் சாத்தியம் என்பதால் ராசியானார்கள்.
'அஞ்சான்' படத்திற்குப் பிறகு சண்டைக்கோழி படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க வேண்டுமென முடிவு செய்திருந்தார் இயக்குநர் லிங்குசாமி. அதற்கான வேலைகளை பரபரப்பாக ஆரம்பித்தார். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷையும், விஷாலின் தந்தையாக மீண்டும் ராஜ்கிரணை நடிக்க வைக்கவும் ஒப்பந்தம் செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால் சிற்சில காரணங்களால் அந்த திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.
அதோடு, அல்லு அர்ஜுன் படத்தை லிங்குசாமி இயக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அல்லு அர்ஜுன் படமும் ட்ராப்பானதால் 'சண்டக்கோழி 2' படத்தை விரைவில் துவக்க ஆர்வம் காட்டுகிறாராம் லிங்குசாமி. சண்டைக்கோழி-2 படம் குறித்து லிங்குசாமி வட்டாரங்களில் விசாரித்தால், 'ஜூலையில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக' தகவல் சொல்லப்படுகிறது. விஷால் தரப்பில் விசாரித்தால் நமுட்டுச்சிரிப்புதான் பதிலாக இருக்கிறது.