கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பிருந்தாவனம்'. குறைவான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது ஒரு பக்கம், எதிர்பார்த்த அளவுக்கு ரிசல்ட்டும் வசூலும் இல்லாமல்போனது இன்னொரு பக்கம் என பிருந்தாவனம் சோக அனுபவமாகிவிட்டது.
இந்தப் படத்தை நம்பிக்கொண்டிருந்த அருள்நிதியின் அடுத்த நம்பிக்கை, அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படம். ஒரு இரவில் நடைபெறும் சம்பவங்களை கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் மாறன் இயக்கி வரும் இந்த படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் அருள்நிதி, மகிமா நம்பியாருடன் ஆனந்தராஜ், அஜ்மல் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தின் டீஸரை நாளை மறுநாள், அதாவது, ஜூன் 3-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். அன்றைக்கு என்ன விசேஷம் என்று சொல்லவும் வேண்டுமா? அருள்நிதியின் தாத்தா மு.கருணாநிதியின் பிறந்த நாள். தாத்தாவின் பிறந்தநாள் சென்ட்டிமெண்ட் பேரனுக்கு வெற்றியைத்தருமான்னு பார்ப்போம்.