'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பிருந்தாவனம்'. குறைவான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது ஒரு பக்கம், எதிர்பார்த்த அளவுக்கு ரிசல்ட்டும் வசூலும் இல்லாமல்போனது இன்னொரு பக்கம் என பிருந்தாவனம் சோக அனுபவமாகிவிட்டது.
இந்தப் படத்தை நம்பிக்கொண்டிருந்த அருள்நிதியின் அடுத்த நம்பிக்கை, அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படம். ஒரு இரவில் நடைபெறும் சம்பவங்களை கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் மாறன் இயக்கி வரும் இந்த படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் அருள்நிதி, மகிமா நம்பியாருடன் ஆனந்தராஜ், அஜ்மல் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தின் டீஸரை நாளை மறுநாள், அதாவது, ஜூன் 3-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். அன்றைக்கு என்ன விசேஷம் என்று சொல்லவும் வேண்டுமா? அருள்நிதியின் தாத்தா மு.கருணாநிதியின் பிறந்த நாள். தாத்தாவின் பிறந்தநாள் சென்ட்டிமெண்ட் பேரனுக்கு வெற்றியைத்தருமான்னு பார்ப்போம்.