கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் 'மகாநதி' படத்தில் சாவித்ரியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இரண்டு தினங்களுக்கு முன் துவங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் லீக்கானது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதேசமயம் இன்னொரு பக்கம் கீர்த்தியின் 'சாவித்ரி' லுக்கை பார்த்து பவன் கல்யாண் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.
தற்போது பவன் கல்யாணின் 25வது படமாக உருவாகி வரும் 'பிஎஸ்பிகே-25' படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.. திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது 'மகாநதி' படத்திற்காக சில கிலோக்கள் எடையை கூட்டியுள்ளார் கீர்த்தி சுரேஷ். அதுமட்டுமல்ல சாவித்ரி லுக்கில் கீர்த்தி சுரேஷை பார்த்த ரசிகர்கள் அதில் அவர் முக தோற்றம் ரொம்பவே மாறியிருப்பதாகவும் கருதுகிறார்கள்.
இதனால் ஒரே நேரத்தில் மகாநதி படத்திலும் பவன் கல்யாண் படத்திலும் கீர்த்தி சுரேஷ் மாறி மாறி நடித்தால் பவன் கல்யாணின் கமர்ஷியல் படத்திற்கு செட்டாகுமா என்கிற கவலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாம். ஆனால் 'பிஎஸ்பிகே-25' தரப்பில் இருந்தோ கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதால் பிரச்சனை ஏதும் இல்லை என்று சொல்லப்படுகிறது..