இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அதிக படங்களை இயக்கியவர் என்கிற உலக சாதனைக்கு சொந்தமான பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் தாசரி நாராயணராவ் நேற்று முன்தினம் காலமானார். நேற்று மாலை அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.. நேற்று தாசரி நாராயணராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அவரது மருமகள் சுசீலா தனது மாமானாரின் சாவில் சந்தேகம் உள்ளதாக தான் கருதுவதாக மீடியாக்களிடம் பகீர் செய்தியை கூறினார். தாசரி நாராயணராவின் மகன் ஹரி பிரபுவின் மனைவி தான் இந்த சுசீலா.
சில கருத்து வேறுபாடுகளால் தனது கணவரை பிரிந்து தனது மகனுடன் தனியாக வசிக்கிறார் சுசீலா. இருந்தாலும் முறைப்படி விவாகரத்து எதுவும் பெறவில்லை.. அவ்வப்போது தனது மாமனாரை சந்தித்து நலம் விசாரித்து செல்வாராம் சுசீலா.. அப்போதெல்லாம் கவலைப்படாதே உன் பையனை நானே ஹீரோவக்குகிறேன் என்று சொல்லியிருந்தாராம் தாசரி நாராயணராவ்.
அதுமட்டுமல்ல சில நாட்களுக்கு முன் தாசரியை சந்தித்தபோது கூட, அவர் நன்றாகத்தான் இருந்ததாகவும் மருத்துவமனை சிகிச்சை முடிந்துவந்தபின் தனது சொத்தை முறைப்படி பிரித்து அதில் ஒரு பங்கை கொடுத்து சுசீலாவுக்கும் அவரது மகனுக்கும் எதிர்காலத்திற்கு பயன்படும் விதமான ஏற்பாடுகளையும் செய்வதாக கூறியிருந்தாராம். இந்தநிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றவர் திடீரென இறந்தது தனக்கு பலத்த அதிர்ச்சியையும் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என கொளுத்திப்போட்டுள்ளார் சுசீலா.