கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சமீபகாலமாக அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளியான அநேக படங்கள் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்துள்ளன. ஏர்லிப்ட், ருஸ்டம் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்துள்ள அக்ஷ்ய், இப்போது டாய்லட், பேடுமேன் போன்ற வித்தியாசமான சமூகம் சார்ந்த படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அக்ஷ்ய், அடுத்தப்படியாக பொறியாளர் ஜேஎஸ் கில் வேடத்தில் நடிக்க இருக்கிறார். யார் இந்த கில் என்பவர்களுக்கு ஒரு சின்ன பிளாஸ்பேக்.... மேற்கு வங்க மாநிலம் ராணி கஞ்ச் ஊரில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு 1989-ம் ஆண்டு பெய்த கடும் மழையால் சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் பணியாற்றிய 64 தொழிலாளர்கள் உயிரோடு மாட்டிக்கொண்டனர். இவர்கள் அனைவரையும் பொறியாளர் ஜேஎஸ்.கில் தன் திறமையால் உயிரோடு மீட்டெடுத்தார். இந்த சம்பவம் இப்போது படமாக உருவாக உள்ளது. இதில் கில் ரோலில் அக்ஷ்ய் குமார் நடிக்க உள்ளார்.
இப்படியொரு கதையை யார் இயக்க போகிறார்கள், யார் தயாரிக்க போகிறார்கள் போன்ற தகவல்கள் எல்லாம் வெளியாகவில்லை.