எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
சமீபகாலமாக அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளியான அநேக படங்கள் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்துள்ளன. ஏர்லிப்ட், ருஸ்டம் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்துள்ள அக்ஷ்ய், இப்போது டாய்லட், பேடுமேன் போன்ற வித்தியாசமான சமூகம் சார்ந்த படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அக்ஷ்ய், அடுத்தப்படியாக பொறியாளர் ஜேஎஸ் கில் வேடத்தில் நடிக்க இருக்கிறார். யார் இந்த கில் என்பவர்களுக்கு ஒரு சின்ன பிளாஸ்பேக்.... மேற்கு வங்க மாநிலம் ராணி கஞ்ச் ஊரில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு 1989-ம் ஆண்டு பெய்த கடும் மழையால் சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் பணியாற்றிய 64 தொழிலாளர்கள் உயிரோடு மாட்டிக்கொண்டனர். இவர்கள் அனைவரையும் பொறியாளர் ஜேஎஸ்.கில் தன் திறமையால் உயிரோடு மீட்டெடுத்தார். இந்த சம்பவம் இப்போது படமாக உருவாக உள்ளது. இதில் கில் ரோலில் அக்ஷ்ய் குமார் நடிக்க உள்ளார்.
இப்படியொரு கதையை யார் இயக்க போகிறார்கள், யார் தயாரிக்க போகிறார்கள் போன்ற தகவல்கள் எல்லாம் வெளியாகவில்லை.