அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் படம் '2.0'. இப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை முடிக்க மட்டும் ஓராண்டு காலத்திற்கு மேல் ஆகும் என்பதால் படத்தின் வெளியீட்டை தீபாவளி தினத்திலிருந்து தள்ளி வைத்துவிட்டார்கள்.
உலகம் முழுவதும் 'பாகுபலி 2' படமும், சீனாவில் 'தங்கல்' படமும் சாதனை புரிந்து வருவதால் '2.0' படத்தையும் சுமார் 10000 தியேட்டர்கள் வரை உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அதற்கான வினியோக வேலைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
தமிழ், ஹிந்தியில் நேரடிப் படமாக உருவாகி வரும் '2.0' படத்தை தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் உலகம் முழுவதும் அதிகமாகப் பேசப்படும் மற்ற மொழிகளிலும் என சுமார் 15 மொழிகளில் டப்பிங் செய்ய உள்ளார்களாம். ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் படத்தை வெளியிடவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.
'பாகுபலி 2, தங்கல்' ஆகிய படங்களின் வசூலை முறியடிக்கும் அளவிற்கு '2.0' படத்தின் வினியோகமும், திரையிடலும் இருக்கும் என்கிறார்கள். இதுவரை இந்தியத் திரையுலகம் கண்டிராத அளவில் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் தயாராகி வருகிறதாம். உண்மையிலேயே ஹாலிவுட்டுக்கு இணையாக என்று சொல்லுமளவிற்கு முதல் இந்தியப் படமாக 2.0 படம் இருக்கும் என்கிறார்கள்.