கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் படம் '2.0'. இப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை முடிக்க மட்டும் ஓராண்டு காலத்திற்கு மேல் ஆகும் என்பதால் படத்தின் வெளியீட்டை தீபாவளி தினத்திலிருந்து தள்ளி வைத்துவிட்டார்கள்.
உலகம் முழுவதும் 'பாகுபலி 2' படமும், சீனாவில் 'தங்கல்' படமும் சாதனை புரிந்து வருவதால் '2.0' படத்தையும் சுமார் 10000 தியேட்டர்கள் வரை உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அதற்கான வினியோக வேலைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
தமிழ், ஹிந்தியில் நேரடிப் படமாக உருவாகி வரும் '2.0' படத்தை தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் உலகம் முழுவதும் அதிகமாகப் பேசப்படும் மற்ற மொழிகளிலும் என சுமார் 15 மொழிகளில் டப்பிங் செய்ய உள்ளார்களாம். ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் படத்தை வெளியிடவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.
'பாகுபலி 2, தங்கல்' ஆகிய படங்களின் வசூலை முறியடிக்கும் அளவிற்கு '2.0' படத்தின் வினியோகமும், திரையிடலும் இருக்கும் என்கிறார்கள். இதுவரை இந்தியத் திரையுலகம் கண்டிராத அளவில் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் தயாராகி வருகிறதாம். உண்மையிலேயே ஹாலிவுட்டுக்கு இணையாக என்று சொல்லுமளவிற்கு முதல் இந்தியப் படமாக 2.0 படம் இருக்கும் என்கிறார்கள்.