டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிறை வாசத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாக நடிக்க தொடங்கியிருக்கும் சஞ்சய் தத், முதற்கட்டமாக பூமி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்தப்படியாக சில படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இந்நிலையில், ஓமங் குமாரிடம் உதவியாளராக இருந்த ஆரம்பப் சிங் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது ஒரு ரொமான்ட்டிக், திரில்லர் படமாக உருவாக உள்ளது.
இதுகுறித்து சஞ்சய் தத் கூறியிருப்பதாவது... "புதியவர்கள் மற்றும் திறமையானவர்களுக்கு எப்போதும் நான் வாய்ப்பு தருவேன். பூமி படத்தில் ஓமங் குமாரிடம் உதவியாளராக இருந்தார் ஆரம்பப் சிங். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அவர் ஒரு கதையை என்னிடம் சொன்னார். கதையை அவர் சொன்ன மாத்திரமே அதில் நடிக்க முடிவு செய்துவிட்டேன். படத்தில் எனது கேரக்டர், கதை, மற்றும் வாரணாசியின் இன்னொரு முகம் என படம் வேறு ஒரு தளத்தில் இருக்கும். படத்திற்கு மலாங் என்று பெயரிட்டுள்ளார்கள், இது ஒரு ஆக்ஷ்ன், திரில்லர் படமாக இருக்கும்" என்றார்.
மலாங் படத்தை பூஷண் குமார் மற்றும் சந்தீப் சிங் இருவரும் தயாரிக்க உள்ளனர். இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.