கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சிறை வாசத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாக நடிக்க தொடங்கியிருக்கும் சஞ்சய் தத், முதற்கட்டமாக பூமி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்தப்படியாக சில படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இந்நிலையில், ஓமங் குமாரிடம் உதவியாளராக இருந்த ஆரம்பப் சிங் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது ஒரு ரொமான்ட்டிக், திரில்லர் படமாக உருவாக உள்ளது.
இதுகுறித்து சஞ்சய் தத் கூறியிருப்பதாவது... "புதியவர்கள் மற்றும் திறமையானவர்களுக்கு எப்போதும் நான் வாய்ப்பு தருவேன். பூமி படத்தில் ஓமங் குமாரிடம் உதவியாளராக இருந்தார் ஆரம்பப் சிங். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அவர் ஒரு கதையை என்னிடம் சொன்னார். கதையை அவர் சொன்ன மாத்திரமே அதில் நடிக்க முடிவு செய்துவிட்டேன். படத்தில் எனது கேரக்டர், கதை, மற்றும் வாரணாசியின் இன்னொரு முகம் என படம் வேறு ஒரு தளத்தில் இருக்கும். படத்திற்கு மலாங் என்று பெயரிட்டுள்ளார்கள், இது ஒரு ஆக்ஷ்ன், திரில்லர் படமாக இருக்கும்" என்றார்.
மலாங் படத்தை பூஷண் குமார் மற்றும் சந்தீப் சிங் இருவரும் தயாரிக்க உள்ளனர். இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.