'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு உள்பட பல நிகழ்ச்சிகளை இயக்கியவர் ராஜ்குமார். இவர் தற்போது ரங்கூன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஆடியோ விழாவில், ராஜ்குமார் ரொம்ப கூலான மனிதர் என்று அந்த படத்தில் நடித்தவர்கள் பேசினர். ஆனால் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரம்யாவோ, அவர் கூலானவர் அல்ல, டென்சன் பார்ட்டி என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த படத்தின் டைரக்டர் ராஜ்குமார் எனது நண்பர். அவர் அறிமுகமாகிற முதல் படத்தில் அவரது பெயரை மீடியாக்களிடம் சொல்லி அறிமுகம் செய்வது எனக்கு சிறப்பான விசயம். ஆனால் ஒரேயொரு டவுட். அவரைப்பற்றி பேசியவர்கள் அனைவருமே அவர் ரொம்ப கூல் பர்சன், டென்சனே ஆகமாட்டார் என்றனர்.
ஆனால் எனக்கு தெரிந்து சின்னத்திரையில் இருந்தபோது அவர் டென்சன் மட்டும்தான் ஆவார். என் போனில்கூட அவர் பெயரை மன உளச்சல் என்று தான் நான் பதிவு செய்துள்ளேன். காரணம், எப்போது பார்த்தாலும் ஒரே மனஉளச்சளோடவே இருப்பார். இன்னைக்குத்தான் அவர் சிரிச்சி நான் பார்க்கிறேன் என்றார் ரம்யா.