ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெற்றிமாறன் இயக்கி வரும் படம் வடசென்னை. தனது வொண்டர்பார் சினிமா சார்பில் தயாரித்து, நடிக்கிறார் தனுஷ். சுமார் 2 ஆண்டுகளாக இந்தப் படத்தின் பணிகள் நடந்து வருகிறது. பலமுறை படப்பிடிப்பு தேதிகள் தள்ளி வைக்கப்பட்டது. தனஷூம் சொந்தப் படம் என்பதால் படத்தை அடிக்கடி தள்ளி வைத்து வேறு படங்களுக்கு சென்று வந்தார். முறையான திட்டமிடுதல் இல்லாமல் படத்தின் பணிகள் நடந்ததால் படத்திலிருந்து முதலில் சமந்தா விலகினார். சமந்தாவிற்கு பதிலாக அமலா பாலை ஒப்பந்தம் செய்தார்கள். அதன் பிறகும் படப்பிடிப்பு தொடங்காததால் அவரும் விலகினார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரு ஷெட்யூல் நடித்தும் முடித்து விட்டார்.
இந்தப் படத்தில் ஹீரோ தனுசுக்கு இணையான வில்லன் கேரக்டர் ஒன்று உள்ளது. இதில் முதலில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பத்து படங்கள் வரை கையில் வைத்திருக்கும் அவரால் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியின் சொதப்பல் தாங்க முடியாமல் படத்திலிருந்து விலகி விட்டார். அதன் பிறகு பல நடிகர்கள் அந்த கேரக்டருக்கு பேசப்பட்டும் பலர் தெறித்து ஓடினார்கள். இப்போது விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய கேரக்டரில் அமீர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அமீர் தற்போது சந்தனதேவன் படத்தை இயக்கி நடித்து வருகிறார். இவராவது நிலைத்து நிற்பாரா அல்லது விலகி ஓடுவரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.