தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு படப்பிடிப்புக்காக பொள்ளாச்சியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பயன்படுத்தி வந்த நடிகை அனுஷ்காவின் கேரவனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. இவர் தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதற்காக அனுஷ்காவிற்ரு ஒரு கேரவனும் வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரத்தில் அனுஷ்கா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
அனுஷ்கா பயன்படுத்திய கேரவன் பொள்ளாச்சி நோக்கி வந்தது. அப்போது வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார், கேரவன் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த கேரவனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கேரவனில் அனுஷ்கா இல்லை, படப்பிடிப்பு முடிந்து அவர் ஹோட்டல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கேரவன் உரிமையாளர் இளங்கோவனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கேரவனுக்கு நீண்டகாலமாக வரி பாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.