‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, தாசரி நாராயண ராவ், 75, உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பெப்சி மற்றும் இயக்குநர்கள் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்சி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "தாசரியின் மறைவு இந்திய சினிமாவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. இவரது குடும்பத்தினர்களுக்கு அனைத்து பெப்சி தொழிலாளர்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் அறிக்கையில், இயக்குநர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் தாசரி நராயண ராவ் ஐதராபாத்தில் காலமானார். எங்கள் சங்கத்தில் ஒருவர். 40 ஆண்டுகளை கடந்து வெற்றி நடை போடும் சங்கத்தின் வளர்ச்சிக்கு அன்றைய காலத்தில் பெரும்துணையாக இருந்தவர். 150 படங்கள் இயக்கி, அதில் 125 படங்கள் வெற்றிபடங்களாக கொடுத்தவர். 11 ஆண்டுகளாக இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர். பெப்சி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர். மிகப்பெரிய சாதனையாளர். இவரது இழப்பு திரைதுறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரது குடும்பத்திற்கு இயக்குநர்கள் சங்தகத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.
தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், இயக்குனர், கதாசிரியர், பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக விளங்கிய தாசரி நாராயண ராவ், செவ்வாய்க்கிழமை மாலை மரணமடைந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை கொள்கிறோம். தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் 150க்கும் மேல் படங்களை இயக்கியதோடு 250க்கும் மேல் படங்களுக்கு கதை திரைக்கதை வசனங்களும் எழுதி சாதனை புரிந்துள்ளார். மேலும் மத்திய மாநில அரசுகள் அவருக்கு விருதுகள் பல வழங்கி கௌரவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாமல் மத்திய அமைச்சராக நாட்டுக்கு சேவை புரிந்துள்ளார். தெலுங்கு சினிமா உலகின் வழிகாட்டியாக திகழ்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் என்றும் நட்பை பராமரித்து வந்த அவரது மறைவு தென்னிந்திய சினிமா உலகிற்க்கே ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அவரது பிரிவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் திரை சமூகத்தின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.