ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மகாபாரதத்தை தழுவி எழுதிய ரண்டமூழம் நாவல், 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. படத்திற்கு 'மகாபாரதம்' என்றே டைட்டிலும் வைத்துவிட்டார்கள்.. பொதுவாக மகாபாரதத்தின் முன்னணி கேரக்டர்களாக இருக்கும் தருமர், அர்ஜூனர், கர்ணன் இந்த கேரக்டர்களை விட ரண்டமூழம் நாவலில் பீமனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பீமனின் பார்வையில் கதை நகர்வதாக அமைக்கப்பட்டுள்ளது.. பீமனாக மோகன்லால் நடிக்கும் இந்தப்படத்தை ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இயக்குகிறார்..
ஆனால் இந்தப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்து அமைப்புகள் சில இந்தப்படத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. குறிப்பாக மகாபாரதம் என்கிற டைட்டிலை வைக்க கூடாது என்பதை அவர்கள் பொதுவான நிபந்தனையாக கூறி படத்திற்கு எதிராக பேசி வருகின்றனர்.. ஆனால் இந்த எதிர்ப்புக்கு கொஞ்சமும் அசைந்து கொடுக்கத படத்தின் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் 'மகாபாரதம்' என்கிற டைட்டிலை மாற்றும் எண்ணம் சிறிதும் இல்லை என கூறியுள்ளார். ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப்படத்தை உலகம் முழுக்க உள்ள ரசிகர்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் முக்கிய கருவியாக இருப்பதே மகாபாரதம் டைட்டில் தான்.. அதை எப்படி மாற்றமுடியும் என்கிறார்கள் படக்குழுவினர்.