அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது கத்ரீனா மேரி ஜான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் இந்தப்படத்தில் கத்ரீனா கைப் மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் கதாநாயகிகளாக நடிக்க இருக்கிறார்கள். ஷாருக்கான் குள்ள மனிதராக நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள பிரதான ஸ்டுடியோ ஒன்றில் மிக பிரமாண்டமான செட் போடப்பட்டு நடைபெற்று வருகிறது. ஷாருக்கானின் காட்சி ஒன்றை படமாக்கிக்கொண்டு இருந்த சமயத்தில் படப்பிடிப்பு தளத்தில் போடப்பட்ட செட்டின் ஒருபகுதியில் இருந்த மேற்கூரை சரிந்து விழுந்தது.
இதில் யூனிட்டை சேர்ந்த இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஷாருக்கான் அதிர்ஷ்டவசமாக கையில் சிறிய காயங்களுடன் மயிரிழையில் தப்பினார். இருந்தாலும் மருத்துவர்கள் ஷாருக்கானுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொன்னபின்னரே படக்குழுவினர் நிம்மதியடைந்தனராம். செட்டை மீண்டும் பாதுகாப்பாக புதுப்பித்தபின் சில நாட்களில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறதாம்.