ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பரவலாக நடித்து வருபவர் ராகுல் பிரீத் சிங். தற்போது மகேஷ்பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் ஸ்பைடர் மற்றும் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ராகுல் பிரீத் சிங். இதுதவிர, சிம்லா மிர்சி என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் படங்களில் தான் கவர்ச்சிகரமாக நடித்து வருவது பற்றி ராகுல் பிரீத் சிங் கூறுகையில், சினிமா நடிகைகளை கவர்ச்சிகரமான தோற்றத்தில் கண்டுகளிக்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதனால் தான் அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பதில் நான் தனி ஆர்வம் காட்டுகிறேன். அதேசமயம், கதாபாத்திரத்திற்கும் காட்சிக்கும் கிளாமர் அவசியப்படாதபோது நான் நடிப்பதில்லை. டைரக்டர்களே கிளாமரை திணிக்க விரும்பினால் அதற்கு நான் ஒத்துக்கொள்வதில்லை. அதேபோல்தான் முத்தக்காட்சிகளிலும் அவசியம் என்கிறபோது மட்டுமே நடிக்கிறேன்.
அதோடு, நான் நடிக்கிற கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்கிற கோணத்தில்தான் சமீபகாலமாக கதைகள் கேட்டு வருகிறேன். பெரிய ஹீரோ படங்களாக இருந்தாலும் எனக்கான கேரக்டர் பிடித்தால் மட்டுமே அந்த படங்களை ஓகே செய்கிறேன். முக்கியமாக, ஒரு படத்திற்கு கால்சீட் கொடுத்து விட்டால், குறித்த நாளில் அந்த ஸ்பாட்டில் இருக்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் கால்சீட் சொதப்பல் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகிறேன் என்றும் கூறுகிறார் ராகுல் பிரீத் சிங்.