ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை சென்றுவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா, தனது ஹாலிவுட் படமான பேவாட்ச் பட புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். இதற்காக ஜெர்மனி சென்றிருக்கிறார் பிரியங்கா.
இந்நிலையில் ஜெர்மன் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடியை, நடிகை பிரியங்கா சோப்ரா சந்தித்தார். இந்த புகைப்படத்தை பிரியங்கா தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், குட்டை பாவடை அணிந்து பிரதமர் முன்பு கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார் பிரியங்கா. இது சமூக வலைதளங்களில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
நாட்டின் பிரதமர் முன் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்தது மட்டுமல்லாமல் அவரை சந்திக்க இப்படியா குட்டை பாவடை அணிந்து செல்வது, இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்கிற ரீதியில் வலைதளங்களில் கண்டனங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் தனக்கு எதிராக எழுந்த கண்டனங்கள் மற்றும் விமர்சனங்களை எல்லாம் கண்டு கொள்ளாத பிரியங்கா, மற்றொரு உடையில் குட்டைப்பாவடை அணிந்த போட்டோவை வெளியிட்டிருக்கிறார்.