அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்தவர் நடிகை பூஜா பத்ரா. ஹிந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் சரத்குமாரின் ஒருவன், அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (நந்தினி வர்மா கேரக்டர்) படங்களிலும் நடித்திருக்கிறார். திருமணம், அதன்பிறகு விவாகரத்து என கொஞ்ச காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர் இப்போது, மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார். தற்போது அவர், மிரர் கேம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருந்த பூஜா, நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தன் சினிமா பயணம் குறித்தும், இப்படம் பற்றியும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதன் விபரம் வருமாறு...
மிரர் கேம் படத்தில் நடிக்க காரணம் என்ன.?
படத்தின் கதையும், எனது கேரக்டரும் என்னை ரொம்பவே கவர்ந்தது. குறிப்பாக எனது கேரக்டர் படம் முழுக்க வலுவானதாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்ல, இப்படத்திற்காக எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளமும் கூட... என்னை இப்படத்தில் நடிக்க தூண்டியது என்றவரிடத்தில் எவ்வளவு சம்பளம் என்று கேட்டால், சிரிக்கிறார்.... ம்ம்ம்... நான் சொல்ல மாட்டேன்.
படத்தில் உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க.?
மிரர் கேம் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் படம். இதில் நான் சைக்காலஜி டாக்டராக நடித்திருக்கிறேன். ஒரு கொலையை கண்டுபிடிக்க போலீஸ்க்கு உதவுவது போன்று எனது கேரக்டர் இருக்கும்.
சமீபகாலமாக வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகளவில் வருகின்றன, உங்களுக்கு அப்படி ஏதாவது ஆசை உள்ளதா.?
என் சினிமா பயணத்தில் யாருடைய வாழ்க்கை வரலாற்று கதையிலும் நான் நடித்தது இல்லை. எனக்கு அப்படியொரு வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். என்னை பொறுத்தமட்டில் கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியமிஸின் வாழ்க்கை படத்தில் நடிக்கும் ஆசை இருக்கிறது. மேலும் ஆக்ஷ்ன் படம், அரசியல் தொடர்பான படம் உள்ளிட்ட பல வித்தியாசமான வேடங்களிலும் நடிக்க விரும்புகிறேன்.
உங்க திரைப்பயணத்தில் கஷ்டமாக, அய்யோ ஏண்டா... இப்படியொரு படத்தில் நடித்தோம் என்று எப்போதாவது எண்ணியது உண்டா.?
ஆமாம் இருக்கிறது. சாசீஸ் என்ற படத்தில் நடித்தபோது எனக்கு தெரியவில்லை. ஆனால் அதன்பின் அப்படியொரு எண்ணம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் எந்த மாதிரி படத்தில் நடிக்கணும், நடிக்கக்கூடாது என்று சொல்வதற்கு யாரும் இல்லை.
சினிமாவில் சிபாரிசு பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?
சிபாரிசு என்பதை விட சினிமாவில் அதிர்ஷ்டமும் வேண்டும். ஒரு பெரிய சினிமா பேனரில், பிரபலமான நடிகருடன் நடிக்கிறேன் என்றால் நிச்சயம் நான் இன்னும் நல்ல நிலைக்கு செல்வேன். இன்றைக்கு அதுபோன்று பிரபலமாக இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்க தான் செய்கின்றன. சில தயாரிப்பு நிறுவனங்கள் என் போன்றவர்களுக்கு வாய்ப்பு தருவதில்லை, சிலர் வாய்ப்பு தருகிறார்கள், இன்னும் சிலர் பெரிய நடிகர்கள் யாராவது சிபாரிசு செய்தால் வாய்ப்பு தருகிறார்கள். என்ன தான் இதுபோன்று வாய்ப்பு கிடைத்தாலும் அதிர்ஷ்டம் வேண்டும். கூடவே ரசிகர்கள் ஏற்று கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த துறையில் நிலைக்க முடியாது.
நீங்க எப்போது படம் இயக்க போகிறீர்கள்.?
படம் இயக்கமா.... நானா.... இயக்கம் என்பது மிகவும் பொறுப்பான வேலை, ஆகையால் இப்போதைக்கு இயக்கம் பற்றி எந்த எண்ணமும் இல்லை. வேண்டுமானால் நான் படங்கள் தயாரிக்கலாம். அதைப்பற்றி ஓரளவுக்கு நன்கு புரிந்து வைத்துள்ளேன். என்னை பொறுத்தமட்டில் இயக்கம் என்பது மிகவும் கடினமான வேலை.
இவ்வாறு பூஜா பத்ரா கூறினார்.