ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் வெளிவந்த திறப்பு விழா படத்தில் ஹீரோவாக நடித்தவர் ஜெய் ஆனந்த். அவர் தற்போது வெளிவர இருக்கும் மரகத நாணயம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
நான் கோமல் சுவாமிநாதனின் நாடக குழுவில் இருந்து சினிமாவுக்கு வந்தவன். எங்கள் குழுவைச் சேர்ந்த கே.ஜி.வீரமணி இயக்கிய திறப்பு விழா படத்தில் என்னை ஹீரோவாக்கினார். டாஸ்மாக் கடையை எதிர்த்து போராடும் ஒரு இளைஞனின் கேரக்டர். திறப்பு விழா வெளியீட்டுக்கு பிறகு எனக்கு நல்ல பாராட்டுகள் கிடைத்தது.
தற்போது மரகத நாணயம் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறேன். நிக்கி கல்ராணியின் கொடுமையான கணவனாக நடிக்கிறேன். இதுதவிர 4ஜி படத்தில் ஜி.வி.பிரகாசுடனும், முண்டாசுபட்டி இயக்குனர் ராம் இயக்கும் மின்மினி படத்திலும், விஷால்-அமலாபால் நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறேன். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று எந்த பிடிவாதமும் கிடையாது. நல்ல கேரக்டர் எது கிடைத்தாலும் நடிப்பேன் என்கிறார் ஜெய் ஆனந்த்.