Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: ஒரே இரவில் முழு படத்துக்கும் திரைக்கதை வசனம் எழுதிய அண்ணாதுரை

31 மே, 2017 - 11:30 IST
எழுத்தின் அளவு:
Annadurai-wrote-screenplay-and-dialogue-for-a-movie-in-a-single-day

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதிய ஓர் இரவு நாடகம் அப்போது வெற்றிகரகமாக நடத்தப்பட்டு வந்தது. அதனை திரைப்படமாக தயாரிக்க விரும்பினார் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். இதனால் அண்ணாதுரையை அணுகி நாடகத்தை திரைப்படத்துக்கான திரைக்கதை வசனமாக எழுதி தர வேண்டும் என்றார். அதற்கு அண்ணாதுரையும் ஒத்துக்கொண்டார். அதற்கு ஏ.வி.மெய்யப்ப செட்டியார், அண்ணாதுரைக்கு சில ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தார்.


ஒரு நாள் ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு அண்ணாதுரை வந்தார். அவரை வரவேற்ற ஏவிஎம் செட்டியார் "நீங்கள் எத்தனை நாள் வேண்டுமானாலும் இங்கிருந்து வசனம் எழுதலாம் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறேன்" என்றார் அண்ணாதுரை சிரித்துக் கொண்டார். இரவு சாப்பிட்டு முடித்ததும், நிறைய பேப்பர் எடுத்துக் கொண்டார், மை பாட்டிலும் பேனாவும் எடுத்துக் கொண்டார். கொஞ்சம் வெற்றிலையும், மூக்குப்பொடியும் எடுத்துக் கொண்டார். "நீங்கள் போய்விட்டு காலையில் வாருங்கள். நான் கொஞ்சம் தாமதமாகத்தான் எழுந்திருப்பேன். நானாக எழுந்திராதவை எழுப்ப வேண்டாம்" என்று கூறிவிட்டு கதவை சாத்திக் கொண்டார்.


மறுநாள் காலை ஏ.வி.எம்.செட்டியார் அண்ணாதுரை அறைமுன் காத்திருந்தார். சரியாக 8 மணிக்கு எழுந்த அண்ணாதுரை, ஏவிஎம் செட்டியாரை அழைத்து "இந்தாருங்கள் படத்தின் திரைக்கதை வசனம், 300 பக்கங்கள் எழுதியிருக்கிறேன். சினிமாவுக்காக ஏதாவது கூட்டி குறைக்க வேண்டுமானால் நீங்களே செய்து கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு சென்று விட்டார். ஏ.வி.மெய்ப்ப செட்டியாருக்கு ஆச்சர்யம். காரணம் ஒரே இரவில் ஒரு படத்திற்கான திரைக்கதையை எழுதியிருப்பது மட்டுமல்ல 300 பக்கத்திலும் ஒரு இடத்தில் கூட அடித்தல் திருத்தல் இல்லை. அந்த ஸ்கிரிப்பட் அப்படியே படமானது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in