பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உளவுத்துறை படத்தை இயக்கிய எஸ்.டி.ரமேஷ் செல்வன், சுவாதி கொலை வழக்கு என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் டீசர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேசியதாவது:
இன்றைக்கு பல வழிகளில் சினிமாவை ஆபத்து சூழ்ந்துள்ளது. அதை தடுக்க கொஞ்ச நாளைக்கு சினிமாவை நிறுத்தி வைப்போம் என்று முடிவெடுத்தோம். அதற்கு கடும் எதிர்ப்பு வந்தது. விஷால் தன்னிச்சையாக முடிவெடுக்கிறான் என்கிறார்கள். எந்த முடிவையும் நான் தன்னிச்சையாக எடுப்பதில்லை. சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை கலந்து ஆலோசித்து தான் அனைத்து முடிவுகளையும் அறிவிக்கிறேன். அப்படித்தான் வேலை நிறுத்தத்தையும் அறிவித்தேன். ஆனால் எந்தெந்த பொந்துகளிலிருந்தோ எலிகள் கிளம்பி வருகின்றன.
ஆன் லைன் புக்கிங்கிற்கு 30 ரூபாய் வசூலிக்கிறார்கள். அதில் ஒரு ரூபாய்கூட தயாரிப்பாளருக்கு வருதில்லை. நாமே ஆன்லைனில் டிக்கெட் விற்போம் என்றால் அது கூடாது என்று எதிரி உருவாகி வருகிறார்கள். கியூப் கட்டணமாக 20 ஆயிரம் வசூலிக்கிறார்கள். 5 ஆயிரம் ரூபாய்க்கு நான் செய்து தருகிறேன் என்று ஒருவன் வாசலில் நிற்கிறான். ஆனால் அவனை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
ஆனால், நான் எதைக் கண்டும் அஞ்சப்போவதில்லை. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் எந்த ஒரு தயாரிப்பாளரும் நஷ்டத்தை சந்திக்காமல் லாபத்தை மட்டுமே சந்திக்கிற நிலையை உருவாக்கி காட்டுவேன். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றார் விஷால். விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் சங்க செயலளார். கதிரேசன், முன்னாள் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.