தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல இயக்குநர் தாசரி நாராயண ராவ்வின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் இரங்கல் தெரிவித்துள்ளனர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தெலுங்கு சினிமாவின் ஜாம்பவான் இயக்குநரும், இந்தியாவில் அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையையும் பெற்றவருமான தாசரி நாராயண ராவ் காலமானார். அவரது மறைவு தெலுங்கு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாசரி மறைவுக்கு கமல் மற்றும் ரஜினி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரஜினி தன் டுவிட்டரில், இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர், நடிகர்களில் ஒருவர் தாசரி நாரயண ராவ். அவரது மறைவு இந்திய சினிமாவிற்கு ஈடு இணை செய்ய முடியாத இழப்பு. தாசரி நாரயண ராவ் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
கமல் தன் டுவிட்டரில், தாசரி நாராயண ராவ் மறைவு தெலுங்கு சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.