'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபகாலமாக நடிகைகள் இடையே தங்களது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதும் பழக்கம் அதிகமாகி வருகின்றன. அந்த வரிசையில் நடிகை கரீனா கபூர், தான் கர்ப்பமாக இருந்த காலக்கட்டத்தை புத்தமாக எழுத உள்ளார். தான் கர்ப்பமான நாள் முதல் குழந்தை பிறந்தது வரை தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், உடல்ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அதில் எழுத உள்ளார். மேலும், இந்த கர்ப்பகாலத்தில் தான் எடுத்து கொண்ட உணவு வகைகள், உடற்பயிற்சிகள் உள்ளிட்ட பல விஷயங்களையும் குறிப்பிட உள்ளார். கரீனா எழுத உள்ள இந்த புத்தகத்தை இரண்டு முன்னணி வெளியீட்டாளர்கள் வெளியிட முன் வந்துள்ளனர்.