தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை கதையில் உருவாகும் படம் மகாநதி. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை தெலுங்கில் எவடே சுப்ரமணியம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ், சாவித்ரி வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் சமந்தா ஒரு நிருபர் வேடத்தில் நடிக்கிறார். நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியிருக்கிறது.
மேலும், இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதையில் உருவாகும் மகாநதி படத்தில் தற்போது 1950 காலகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அதில் சாவித்ரி கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துக்கொண்டிருக்கிறார். முன்னதாக, இந்த சாவித்ரி கதாபாத்திரத்திற்காக அவர் நடித்த பல படங்களை பார்த்ததோடு, அவரது பாணியில் நடிக்க வேண்டும் என்பதற்காக டைரக்டர் நாக் அஸ்வின் முன்னிலையில் ரிகர்சல் பார்த்த பிறகே களமிறங்கியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.