ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபுதேவா நடித்த தேவி படத்தை அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் வனமகன். ஜெயம்ரவி நாயகனாக நடித்துள்ள இந்த படம் வருகிற ஜூன் 23-ம் தேதி வெளியாகிறது. இந்தி நடிகை சாயிஷா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் வாய் பேசாத காட்டுவாசியாக நடித்துள்ளார் ஜெயம்ரவி. அந்தப் படத்தை அடுத்து மலையாளத்தில் வெளியான சார்லி படத்தை மாதவன்-சாய் பல்லவியை வைத்து ஏ.எல்.விஜய் தமிழில் ரீமேக் செய்வார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படம் டிராப் செய்யப்பட்டு விட்டது.
இந்நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் நாக சவுர்யா-சாய் பல்லவி நடிப்பில் கரு என்ற பெயரில் ஒரு திரில்லர் படத்தை தமிழ்-தெலுங்கில் இயக்கி வருகிறார் ஏ.எல்.விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தபடியாக ஐதராபாத்தில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. மேலும், இந்த கரு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் நாக சவுர்யா, கதைப்படி சென்னை பையனாகவே நடித்து வருகிறார்.