'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
விதார்த், டப்பிங் ஆர்ட்டிஸ் ரவீனா ரவி நடித்துள்ள படம் ஒரு கிடாயின் கருணை மனு. சுரேஷ் சங்கய்யா இயக்கி உள்ளர், ஆர்.ரகுராம் இசை அமைத்துள்ளார், ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஈராஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
காணாமல் போன தனது செல்ல ஆட்டுக்குட்டியை தேடிச் செல்லும் ஒருவனின் கதை. காணாமல் போன ஆடு இன்னொருவரால் கோவிலுக்கு நேர்ந்து விடப்படுகிறது. கோவிலில் பலியாவதிலிருந்து ஆடு எப்படி காப்பாற்றப்படுகிறது என்கிற பதை. படம் தயாராகி ஒரு வருடத்துக்கு மேலாகிறது.
இதுவரை சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல்வேறு விருகளை பெற்றுள்ளது. தணிக்கை குழுவிடம் மாட்டி பிறகு மறு தணிக்கை செய்யப்பட்டு படம் வெளிவந்தது. பலமுறை தியேட்டர்களில் வெளியிட திட்டமிடப்பட்டு தள்ளிப்போடப்பட்டு வந்த இந்தப் படம் வருகிற ஜூன் 2ந் தேதி வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படத்துக்கு கிடைத்த மரியாதை அளவுக்குள் அடங்காதது. கோடை விடுமுறையில் குழந்தைகள் மட்டுமின்றி , பெரியவர்களும் இந்த படத்தை நிச்சயம் ரசிப்பர். கிராமிய பின்னணியில் இருந்து வந்து தற்போது நகரத்தில் வாழ்வோருக்கு தங்களுடைய கிராமிய நினைவுகளை பசுமையாக மீண்டும் நெஞ்சில் பூக்க வைக்கும் "ஒரு கிடாயின் கருணை மனு" என்கிறார் ஈரோஸ் நிறுவனத்தின் தென் மண்டல தலைமை அதிகாரி சாகர் சத்வானி.