தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத். தொட்டா சினுங்கி படத்தில் அறிமுகமான இவர் ஜீன்ஸ், நினைவிருக்கும் வரை, சாக்லேட், மின்னலே, முத்தம், பரசுராம், கில்லி, உதயம் என்எச் 4 உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன் பிறகு நடிப்பதை கைவிட்டு நடன இயக்குனராக பணியாற்றினார். ஒரு பாடலுக்கும் ஆடிவந்தார். இதுதவிர நடனப்பள்ளியும் நடத்தி வருகிறார்.
நாகேந்திர பிரசாத் இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். சமீபத்தில் போகன் படத்தில் ஒரு ரோலில் நடித்தவர் அடுத்தப்படியாக கூத்தன் என்ற படத்தில் நடிக்கிறார். நடனத்தை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தில் ராஜ்குமார் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். இவர்களுடன், ஊர்வசி, மனோபாலா, பாக்யராஜ், ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீஜிட்டா, கீரா, சினிதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மாடசாமி ஒளிப்பதிவு செய்கிறார். பாலாஜி இசை அமைக்கிறார். நீல்கிரீஸ் எண்டர்டைன்மெண்ட் சார்பில் நீல்கிரீஸ் முருகன் தயாரிக்கிறார். ஏ.எல்.வெங்கி என்ற புதுமுகம் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் தரமணி எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியில் பூஜையுடன் நேற்று தொடங்கியது.