'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னை 28 படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வெற்றி கண்டார். தற்போது அவர் கதை திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் படத்தின் பெயர் ஆர்.கே.நகர்.
சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை பெற்ற பிறகு ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அதன் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலில் நின்றும் வெற்றி பெற்றார். இதனால் ஆர்.கே.நகர் தொகுதி தமிழ்நாட்டின் விஐபி தொகுதி ஆனது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அந்த தொகுதியில் இடைதேர்தல் வந்தது. அதிமுக சார்பில் தினகரன் போட்டியிட்டார் ஒரு ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதோடு தினகரன் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டார். இதனால் ஆர்.கே.நகர் தொகுதி இன்னும் பாப்புலராகி விட்டது.
இந்த நிலையில்தான் வெங்கட்பிரபு ஆர்.கே.நகர் கதையை உருவாக்கி இருக்கிறார். அதுவும் அரசியல் கதையாக படத்தின் பர்ஸ்ட் லுக்கில் கேரக்டர்களை வேட்பாளர்கள் என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தை வெங்கட் பிரபுவின் உதவியாளரும் வடகறி படத்தை இயக்கியவருமான சரவணன் ராஜன் இயக்குகிறார்.
வைபவ், சனா அல்தாப், பிரேம்ஜி அமரன், சம்பத் நடிக்கிறார்கள். யுவன் இசை அமைக்கலாம் என்று தெரிகிறது. வெங்கட்பிரபுவும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். வருகிற ஜூன் 7ந் தேதி முதல் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. இது ஒரு அரசியல் காமெடி படம். பிளாக் டிக்கெட் நிறுவனத்தின் சார்பில் வி.ராஜலட்சுமி, பத்ரி கஸ்தூரி தயாரிக்கிறார்கள்.