ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
கடந்த ஆண்டு சுவாதி என்ற கம்ப்யூட்டர் பொறியாளர் அதிகாலையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். தனது ஒரு தலை காதலை ஏற்றுக் கொள்ளாததால் சுவாதியை கொன்றதாக அவர் வாக்கு மூலம் கொடுத்ததாக கூறப்பட்டது. பின்னர் புழல் சிறை காவலில் இருந்த ராம்குமார், மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
சுவாதி கொலை, ராம்குமார் தற்கொலை குறித்து பல்வேறு தகவல்கள் இணைய தளங்களில் வந்தது. சூடான விவாதங்கள் நடந்தது. இதன் பின்னால் ஜாதி பிரச்னை உள்ளது, கவுரவ பிரச்னை உள்ளது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது. ராம்குமார் இறந்து விட்டாலும் இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் சுவாதின் கொலை வழக்கை மையமாக கொண்டு சுவாதி கொலை வழக்கு என்ற பெயரிலேயே ஒரு படம் தயாராகி உள்ளது.
விஜயகாந்த் நடிப்பில் உளவுத்துறை படத்தை இயக்கிய எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்குகிறார். விஜயகாந்தின் உதவியாளராக இருந்த எஸ்.கே.சுப்பையா தயாரிக்கிறார். சுவாதி வேடத்தில் ஆயிரா என்ற புதுமுகமும், ராம்குமார் வேடத்தில் மனோ என்ற புதுமுகமும் நடிக்கிறார்கள். வழக்கை விசாரிக்கும் நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சங்கர் வேடத்தில் அஜ்மல் நடிக்கிறார். ஜோன்ஸ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார். ஷாம் டி.ராஜ் இசை அமைக்கிறார்.
படத்தை பற்றி இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வனும், கதாசிரியர் ஆர்.பி.ரவியும் கூறியதாவது: இந்தப் படம் சுவாதி கொலை வழக்கின் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது, இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடனோ, சிரமப்படுத்தும் நோக்கத்துடனோ எடுக்கப்பட்டதல்ல. சுவாதி கொலை செய்யப்பட்டதில் இருந்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டது வரையிலான போலீஸ் விசாரணையை அடிப்படையாக கொண்டதே இந்தப் படம்.
இதற்காக பல போலீஸ் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து தகவல் திரட்டி படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. கொஞ்சம்கூட கற்பனை கலக்காது படம் உருவாகி உள்ளது. சுவாதி கொலை வழக்கில் இன்னும் விடை தெரியாத பல கேள்விகள் உள்ளது. அதற்கான பதிலும் இதில் இருக்கும். இன்னொரு சுவாதி கொலை செய்யப்படக்கூடாது. இன்னொரு ராம்குமார் சாகக்கூடாது என்பதற்காகவே இந்தப் படத்தை உருவாக்கி வருகிறோம் என்கிறார்கள்.