தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சுந்தர்.சி இயக்கத்தில் தேனாண்டாள் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க இருக்கும் படம் சங்கமித்ரா. பாகுபலி போன்று பிரமாண்டமாக தயாரிக்க முடிவு செய்துள்ளனர். ஜெயம்ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பதாக முதல் கட்டமாக முடிவாகி இருந்தது. படத்தின் முறையான அறிவிப்பை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டனர். அதில் ஸ்ருதிஹாசன், சங்கமித்ராவாக குதிரையின் மீது கம்பீரமாக அமர்ந்திருப்பது போன்ற டிசைன் வெளியிட்டனர். இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் சங்கமித்ரா படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக தேனாண்டாள் ஸ்டூடியோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசன் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்று தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வருமாறு:
சங்கமித்ரா என்ற டைட்டில் கேரக்டரில் நடிப்பதால் எந்த நிபந்தனையும் இன்றி நடிக்க ஒப்புக்கொண்டார் ஸ்ருதி. ஹாலிவுட் பயிற்சியாளரிடம் வாள் சண்டையும் கற்றார். முழு திருப்பதியுடன் தான் கேன்ஸ் விழாவுக்கும் வந்தார். ஆனால் சிலர் அவரிடம் இந்த ப்ராஜக்ட் டேக்அப் ஆகாது. கதையே இன்னும் தயாராக வில்லை. ஆர்யாவையும், ஜெயம்ரவியையும் வைத்துக் கொண்டு 200 கோடி செலவு செய்ய தயாரிப்பாளர் தயாராக இல்லை. 2 வருடம் வேறு எந்தப் படத்திலும் நடிக்க முடியாது என்ற அவரிடம் கூறியுள்ளனர். இதனால் அவர் விலக ஆரம்பித்தாராம்.
மேலும், ஸ்ருதி நடிப்பது சரியாக இருக்குமா என்று தயாரிப்பாளர் தரப்புக்கும் ஒரு தயக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வாள் சண்டை பயிற்சியில் அவரால் சரியான கவனத்துடன் ஈடுபட முடியவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. அதோடு கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட டிசைனை பார்த்தவர்கள். ஒரு மகாராணிக்கான லுக் ஸ்ருதியிடம் இல்லை. குறிப்பாக அனுஷ்காவுடன் ஒப்பிடும்போது ஸ்ருதிக்கு இந்த கேரக்டரை தாங்கும் சக்தி இல்லை என்று கூறியிருக்கிறார்கள். இதனால்தான் அவர் தொடர்ந்த பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.
ஸ்ருதிஹாசன் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழில் தயாரிக்கப்படும் பிரமாண்ட படம், இதனால் தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை என்பதால் தான் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஸ்ருதி நடிக்க ஒப்புக் கொண்டார். காலஅவகாசம் குறைவு என்பதால்தான் அமெரிக்காவிற்கு சென்று சண்டை கலையும் கற்றார். கேன்ஸ் திரைப்பட விழாவிற்கும் சென்றார். ஆனால், இதுவரை சங்கமித்ராவின் கதை என்ன என்பதை கூட அவர்கள் கூறவில்லை. ஆர்யா, ஜெயம்ரவி தவிர வேறு நடிகர், நடிகைகளையும் ஒப்பந்தம் செய்யவில்லை. இரண்டு வருடங்கள் கால்ஷீட் தர ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் எப்போது முடியும் என்ற எந்த திட்டமிடலும் அவர்களிடம் இல்லை.
பாகுபலி இரண்டாம் பாகத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அவர்களுக்கு சங்கமித்ராவை கொண்டு வருவதில் தயக்கம் இருக்கிறது. இப்படி பல குழப்பங்கள் நிலவுவதால் ஸ்ருதி அந்த ப்ராஜக்டிலிருந்து விலக நேரிட்டது என்கிறார்கள்.