துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
மம்முட்டி தற்போது நடித்து வரும் படம் 'மாஸ்டர் பீஸ்'. அஜய் வாசுதேவ் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் மம்முட்டி கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார். இது கல்லூரி சம்பந்தப்பட்ட கதை என்பதால் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக கோல்கட்டாவில் உள்ள பாத்திமா மாதா கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்தப்பகுதிக்கு பிரைவேட் செக்யூரிட்டி மூலம் படக்குழுவினரால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் சமீபத்தில் தேர்வெழுதுவதற்காக கல்லூரிக்கு வந்த மாணவர்களிடம் ரொம்பவே கெடுபிடி காட்டி தடுத்தி நிறுத்தியுள்ளார்கள் இந்த செக்யூரிட்டி ஆட்கள். இதனால் மாணவர்களுக்கும், செக்யூரிட்டி ஆட்களுக்கும் மோதல் ஏற்பட்டு அடிதடி வரை செல்லும் சூழல் உருவானது. இந்த தகவலை அறிந்து அங்கே வந்த கல்லூரி முதல்வர் மாணவர்களை சமாதானப்படுத்தி தேர்வெழுத அனுப்பி வைத்தாராம்.
ஷூட்டிங் ஆரம்பித்த தினத்தில் இருந்தே இந்த செக்யூரிட்டி ஆட்கள் கல்லூரி காம்பவுண்ட் ஓரமாக நடமாடுபவர்களிடம் கூட தகராறு செய்து வருவதாகவும் அவர்களில் பலபேர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் என்கிற புகாரும் ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில் மாணவர்களுடன் இந்த நபர்கள் மோதலில் ஈடுபட்ட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.