பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் புதிய படம் காலா. கபாலி படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இயக்குகிறார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் தேசிய விருது பெற்ற நடிகைகள் ஹூமா குரேஷி, அஞ்சலி பாட்டீல் ஆகியோர் நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற சமுத்திரக்கனியும் படத்தில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது தேசிய விருது நடிகர் நானே படேகரும் இணைந்துள்ளார். நானே படேகர் சிறந்த நடிகருக்காக தேசிய விருதை மூன்று முறை பெற்றவர். காலா படத்தில் மும்பை தாராவி ரஜினிக்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. நானே படேகர் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு இப்போதுதான் தமிழ் படத்தில் நடிக்கிறார். சமுத்திரகனி ரஜினியின் வலது கரம்போன்ற உதவியாளர், பாதுகாவலராக நடிக்கிறார். அருள்தாஸ் ரஜினி அடியாளாக நடிக்கிறார். இவர்கள் தவிர சம்பத், ஈஸ்வரி ராவ், ரவிகாலே, சாயஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, அரவிந்த் ஆகாஷ், சுகன்யாக ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்புகள் நேற்று மும்பையில் தொடங்கியது. ரஜினி, கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணிந்து மும்பை தாதாவாக நடித்தார். தாராவி பகுதி கலெக்டரை சந்தித்து பேசுவது போன்ற காட்சி படமானது. தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடக்கிறது.