இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் மீண்டும் தொடங்கியுள்ள போராட்டத்தில் நடிகர் ஆரி கலந்து கொண்டார், அவருடன் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஆரி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ் நாட்டிலுள்ள விவசாய சங்கங்கள் அனைத்தும் அவர்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதனை கலைத்து ஒன்று சேர வேண்டும். இம்மண்ணையும், விவசாயத்தையும் காக்க மாணவர்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் மருத்துவராக வருவேன், நான் பொறியாளராக வருவேன், நான் கலெக்டராக வருவேன் என்கிற மனப்பான்மையை விடுத்து நாங்கள் விவசாயிகளாகவே தோன்றி இம்மண்ணில் விதைகளாவோம் என உறுதி கொள்ள வேண்டும். பெற்றோர்களும், எங்கள் பிள்ளைகளை விவசாயிகளாக மட்டுமே ஆக்குவோம் என்றும், மாணவர்களும் வரும் காலத்தில் விவசாயிகளாகவே வருவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
தற்போது விவசாயிகளுக்கு அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்றிணைந்து இந்தியாவில் இருக்கும் அனைத்து விவசாய சங்கங்களை ஒருகிணைத்து போராட வேண்டும், அனைத்து விவசாய கடன்களையும் அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார் ஆரி.