அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தெலுங்கில் நயன்தாரா பீக்கில் இருந்த நேரத்தில் அதாவது 2012ல் நடிக்க ஒப்புக்கொண்ட படம் தான் 'அரடுகுல புல்லட்'. கோபிசந்த கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படமத்தை முதலில் பூபதி பாண்டியன் இயக்குவதாகத்தான் இருந்தது. ஆனால் சில காரணங்களால் பூபதி பாண்டியன் வெளியேற சீனியர் இயக்குனரான பி.கோபால் இந்தப்படத்தை இயக்க ஆரம்பித்தார். இந்தப்படம் ஆரம்பித்த சமயத்தில் தான் நயன்தாரா அடுத்து தெலுங்கு படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு தமிழ்ப்படங்களில் மட்டும் கவனம் காட்ட ஆரம்பித்தார். தவிர வேறு சில பிரச்சனைகளாலும் படப்பிடிப்பு அவ்வப்போது தள்ளிப்போனது.
எனவே நயன்தாராவிடம் இருந்து கிடைத்த தேதிகளை வைத்து ஒரு வழியாக 90 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டனராம். இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் எடுத்தால் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என்கிற நிலையில் நயன்தாரா இந்தப்படத்திற்கு தேதிகள் கொடுக்காமல் இழுத்தடித்ததாக சொல்லப்படுகிறது. ஒருவழியாக ஸ்பெயினில் இரண்டு பாடல் காட்சிகளை படமாக்க ஏற்பாடு செய்து, நயந்தாரவையும் அழைத்து வந்து படப்பிடிப்பை நடத்தினார்களாம். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் நயன்தாரா கெடுபடியாக நடந்து கொண்டதாகவும், ஆனாலும் படத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் பல்லைக்கடித்துக்கொண்டு நயன்தாராவின் டார்ச்சர்களை தங்கிக்கொண்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது..
இப்போது படப்பிடிப்பு முடிந்தநிலையில் அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விடுகிறார்களாம் தயாரிப்பாளரும், இயக்குனரும். அதனால் தான் படப்பிடிப்புக்கே இத்தனை கெடுபிடி காட்டிய நயன்தாரா, புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வராதது அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி அளிக்கவில்லை. எப்படியோ ஒரு வழியாக வரும் ஜூன்-9ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.. இவ்வளவு நாள் காத்திருந்ததற்கான பலன் கிடைக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.