பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நடிகர் ரஜினி நடிக்கும், காலா படம், காமராஜர் ஆட்சிக் கால திட்டங்களையும், மும்பை தாதா திரவியம் நாடாரின் வாழ்க்கையையும் விவரிக்கும் வகையில் அமைவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதை அறிந்த நாடார் அமைப்புகள், நாடாள வா என, போஸ்டர் ஒட்டி, ரஜினிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.
ரஜினியின் புதிய படத்திற்கு, காலா என, பெயரிடப்பட்டு உள்ளது. காலா என்றால், ஹிந்தியில் கறுப்பு என, அர்த்தம். காங்கிரசின் அகில இந்திய தலைவராக காமராஜர் தேர்வான போது, அவரை, காலா காந்தி என, வட மாநில தலைவர்கள் அழைத்தனர். மும்பை தாராவியில் வசிக்கும் தமிழர்களையும், காலா என, அழைப்பதுண்டு. சோழ மன்னர் கரிகாலன், பல பகுதிகளுக்கு படையெடுத்து சென்று, தமிழர்களின் வீரத்தை பறைசாற்றினார். அவரது ஆட்சியில், கல்லணை கட்டப்பட்டது. அதேபோல, தமிழகத்தில், காமராஜர் ஆட்சிக் காலத்தில் தான், மணிமுத்தாறு உட்பட, ஒன்பது அணைகள் கட்டப்பட்டன.அதனால், காமராஜர் ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களை விவரிக்கும் வகை யில், ரஜினியின் காலா படம் எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், திருநெல்வேலி மாவட்டம், ஆவரைக்குளத்தைச் சேர்ந்த திரவியம் நாடார், 1950ல், மும்பை தாராவி பகுதியில், தாதாவாக இருந்தார்.
ஆதரவு : அபகரிப்பு கும்பல்களிடம் இருந்து, நிலத்தை மீட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். குறிப்பிட்ட ஜாதியினர் ஆதிக்கத்தால், நிலம், வீடுகள் பறிக்கப்பட்டு, துரத்தப்பட்டவர்களுக்கு அவர் ஆதரவு தந்துள்ளார். எனவே, அவரது வாழ்க்கை சம்பவங்களும், காலா படத்தில் இடம் பெற உள்ளன. இப்படி, ரஜினியின் படம் பற்றிய தகவல்கள், கோலிவுட் வட்டாரத்தில் கசிந்துள்ள நிலையில், அவரது அரசியல் பிரவேசத்தை வரவேற்று, நாடார் அமைப்பினர், சென்னை யில், நேற்று போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அதில், எதையும் நாடாத தலைவா, நீ நாடாள வா; தமிழகத்தில், அனைத்து சமூகத்தினருக்கும் சமமான, சமூக நீதியை நிலைநாட்ட, நீ நாடாள வா என்ற, வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.