திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
ஜீ தமிழ் சேனலில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வ தெல்லாம் உண்மை நிகழ்ச்சி அடிக்கடி சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியையும், லட்சுமி ராமகிருஷ்ணனையும் கலாய்த்து வேறொரு சேனலில் லைவ் ஷோ நடத்தினர். பின்னர் சினிமாக்களிலும் அவரை கிண்டல் செய்து பாடல் மற்றும் காட்சிகள் வைத்தனர். மேலும், சில மாஜி ஹீரோயின்கள் இப்படியொரு நிகழ்ச்சி தேவைதானா? என்று விமர்சனம் செய்தனர். இருப்பினும், எந்த விமர்சனங்களுக்கும் செவி கொடுக்காமல் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இந்நிலையில், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைப்பற்றி தொடரும் விமர்சனங்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில், ஒரு பிரச்சினை என்று வரும்போது நல்ல கெட்டதை ஆராய்ந்து அந்த சூழுலுக்கேற்ற முடிவை எடுக்கிறோம். மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் சென்று முறையிட சொல்வதெல்லாம் உண்மையை விட வேறு நல்ல நடைமுறை வரும்போது இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொள்வோம். அதனால் எங்களைப் பற்றி தொடர்ந்து குறை சொல்வதை விட்டு விட்டு, இந்த பிரச்சினைகளுக்காக வேறொரு தளத்தை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படி நீங்கள் உருவாக்கினால் அப்போது இந்த சமூகத்துக்கு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தேவைப்படாது என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.