பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் தற்போது திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஐதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ், அனு இமானுவேல் நாயகிகளாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. இன்னும் தலைப்பு வைக்காத இப்படத்தை பிஎஸ்பிகே -25 என்று அழைத்து வருகின்றனர்.
மேலும், இந்த படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். இதற்கு முன்பு தமிழில் அவர் இசையமைத்த பல படங்கள் தெலுங்கில் டப்பாகியிருக்கிறது. ஆனால் இந்த படத்திற்கு அவர் நேரடியாக இசையமைக்கிறார். அதோடு பவன் கல்யாணின் 25-வது படம் என்பதோடு, தனக்கு முதல் நேரடி தெலுங்கு படம் என்ப தால் இந்த படத்திற்கு அதிக காலஅவகாசம் எடுத்து சூப்பர் ஹிட் பாடல்களாக இசையமைத்துள்ளாராம். படத்தின் பாடல்களைக்கேட்ட பவன் கல்யாண், அனிருத்துக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறாராம்.