ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்பைடர்'. இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்ட நாட்களை விட தள்ளிப் போவதால் படம் செப்டம்பரில் தான் வெளியாகும் என்று நாம் முன்னரே சொல்லியிருந்தோம். அதோடு, படத்தின் டீசரை தன்னுடைய அப்பாவின் பிறந்த நாளான மே 31ம் தேதி மகேஷ் பாபு வெளியிடுவார் என்றும் செய்தி வெளியிட்டிருந்தோம். அவை இரண்டையும் மகேஷ் பாபு உறுதி செய்துள்ளார்.
நேற்று அவருடைய டிவிட்டரில் இது குறித்த பதிவை வெளியிட்டுள்ளார் மகேஷ் பாபு. “தசராவிற்கு 'ஸ்பைடர்' படம் வெளியாகிறது. மே 31ம் தேதி மாலை 5 முதல் படத்தின் முதல் பார்வையுடன் பார்ட்டியை ஆரம்பிப்போம்,” என்று பதிவிட்டுள்ளார். அவர் முதல் பார்வை என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார். படத்தின் முதல் பார்வை ஏற்கெனவே வெளியாகிவிட்டது. அடுத்து டீசர்தான் வெளியாக வேண்டும்.
பொதுவாக இது போன்ற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமோ அல்லது இயக்குனரோ தான் வெளியிடுவார்கள். ஆனால், மகேஷ் பாபு தன்னுடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அவரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.