பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் வெளியேறுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. தங்களுடைய ரசிகர்களுக்காக ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் கணக்கு ஆரம்பித்து அதன் மூலம் தங்களைப் பற்றியும், தங்களது படங்களைப் பற்றியும் பிரபலங்கள் இலவசமாக விளம்பரம் செய்து வந்தார்கள். ஆனால், சிலர் அதில் பரபரப்புக்காக கருத்துக்களைப் பதிவிட்டு தங்களைப் பற்றி செய்திகள் வெளிவருவதை விரும்பினார்கள். பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்த வகையைச் சார்ந்தவர்கள்தான்.
அவருடைய மாநிலம் சாராத விஷயங்களில் கூட கருத்துக்களைச் சொல்லி மூக்கு உடைபட்டவர். அதற்கு பெரிய உதாரணம் ஜல்லிக்கட்டு. சிரஞ்சீவி குடும்பத்தினரைக் கிண்டல் செய்தது, பவன் கல்யாணை வம்புக்கு இழுத்தது என அவர் சார்ந்த தெலுங்குத் திரையுலகத்தையும் சேர்த்து அவர் வாங்கிக் கட்டிக் கொண்டது அதிகம். அதிசயமாக 'பாகுபலி 2' படத்தைப் பற்றித்தான் அவர் பாராட்டி எழுதினார்.
ராம்கோபால் வர்மா இயக்கி சமீபத்தில் வெளிவந்த 'சர்க்கார் 3' படம் படுதோல்வியைத் தழுவியது. இந்த சூழ்நிலையில் நேற்று திடீரென டிவிட்டரை விட்டு விலகுவதாக ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார்.
“இனி படங்கள் மூலமும், வீடியோக்கள் மூலம் இன்ஸ்டாகிராம் மூலம் மட்டுமே பேச உள்ளேன். இதுதான் என்னுடைய டிவிட்டர் மரணத்திற்கு முன் நான் பதிவிடும் கடைசி டிவீட். இதற்காக வருத்தப்படமாட்டேன், இப்போது முதல் வேலை செய்ய முடிவெடுத்துள்ளேன். @RGGzoomin - பிறப்பு 27-5-2009, இறப்பு 27-5-2017,” என தன்னுடைய கடைசி டிவீட்டாகப் பதிவு செய்துள்ளார்.
சுமார் 8 வருடங்கள் டிவிட்டரில் பல சர்ச்சைக் கருத்துக்களைப் பதிவிட்டு வந்த ராம்கோபால் வர்மா உண்மையிலேயே டிவிட்டரை விட்டு விலகிவிட்டாரா அல்லது அவருடைய வழக்கமான ஸ்டன்ட்டா, என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்று சொல்வார்கள். ராம்கோபால் வர்மா போன்றவர்களுக்கு கருத்து சொல்லவில்லை என்றால் தூக்கம் வராது. பார்ப்போம், என்ன நடக்கிறது என்று...