கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி - ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் காலா. ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கிறார். ரஜினியுடன் ஹூயுமா குரேஷி, அஞ்சலி பாட்டீல், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர். திருநெல்வேலியிலிருந்து மும்பை சென்று செட்டிலான ஒரு தாதாவைப் பற்றிய கதை என படத்தின் கதை பற்றி வெளியே தகவல் கசிந்துள்ளது. இதன் படப்பிடிப்பு நாளை(மே 28-ம் தேதி) முதல் மும்பையில் ஆரம்பமாக உள்ளது. இதற்காக மும்பை புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.
இந்நிலையில், மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் அரசியல் பற்றிய கேள்வியை முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த ரஜினி, நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றி சொல்வேன் என்றார். தொடர்ந்து அவரிடத்தில் மாட்டிறைச்சி தடை விஷயம் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்க பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
முன்னதாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி, "காலா படப்பிடிப்பிற்காக மும்பை செல்கிறேன். நடிப்பது என் வேலை, இது உங்கள்(பத்திரிகையாளர்கள்) வேலை. எனது வேலையை செய்ய விடுங்கள்" என்றார்.