பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி - ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் காலா. ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கிறார். ரஜினியுடன் ஹூயுமா குரேஷி, அஞ்சலி பாட்டீல், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர். திருநெல்வேலியிலிருந்து மும்பை சென்று செட்டிலான ஒரு தாதாவைப் பற்றிய கதை என படத்தின் கதை பற்றி வெளியே தகவல் கசிந்துள்ளது. இதன் படப்பிடிப்பு நாளை(மே 28-ம் தேதி) முதல் மும்பையில் ஆரம்பமாக உள்ளது. இதற்காக மும்பை புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.
இந்நிலையில், மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் அரசியல் பற்றிய கேள்வியை முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த ரஜினி, நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றி சொல்வேன் என்றார். தொடர்ந்து அவரிடத்தில் மாட்டிறைச்சி தடை விஷயம் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்க பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
முன்னதாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி, "காலா படப்பிடிப்பிற்காக மும்பை செல்கிறேன். நடிப்பது என் வேலை, இது உங்கள்(பத்திரிகையாளர்கள்) வேலை. எனது வேலையை செய்ய விடுங்கள்" என்றார்.