டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
ராக் ஆன், கை போ சே, பிட்டூர், போன்ற படங்களை இயக்கியவர் அபிஷேக் கபூர். இவர் அடுத்தப்படியாக ஒரு காதல் கதையை இயக்க உள்ளார். இதில் சுஷாந்த் சில் ராஜ்புட் ஹீரோவாக நடிக்க உள்ளார். படத்தில் ஹீரோயினாக நடிகர் சைப் அலிகானின் மகள் சாரா அலிகான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சைப் மற்றும் சாரா இருவரிடமும் அபிஷேக் பேசியிருக்கிறார். கதை பிடித்ததால் தன் மகளை இப்படத்தில் நடிக்க வைக்க உள்ளாராம் சைப். பாலாஜி மோசன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படம் அடுத்தாண்டு துவங்க உள்ளது. தற்போது படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே சாரா அலிகான் ஸ்டூடண்ட் ஆப் தி இயர்-2 படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் சாராவின் முதல்படம் எதுவாக இருக்க போகிறது என்ற ஆவல் பாலிவுட்டில் எழுந்துள்ளது.